Tuesday, April 16, 2013

கனவுகளை ஞாபகப்படுத்தும் அப்பிளிக்கேஷனை உருவாக்கும் முயற்சி தீவிரம்

ஒருவருடைய உறக்கத்தின்போது உண்டாகும் கனவுகளை பிறிதொருவரால் அறிய முடியாது, அதே போல சில சமயங்களில் குறித்த நபராலே மறுநாள் காலையில் அக்கனவை ஞாபகம் வைத்திருக்கவும் முடியாது.
எனவே இவ்வாறு ஞாபகமற்றுப்போகும் கனவுகளை மீளவும் ஞாபகப்படுத்தக்கூடிய வகையில் MRI ஸ்கான் முறையைப் பயன்படுத்தி சேகரிக்கப்படும் தகவல்களை கொண்டு விபரிக்கக்கூடிய தொழில்நுட்பத்தினை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.
இதற்கென விசேட அப்பிளிக்கேஷன் ஒன்றும் உருவாக்கப்படவுள்ளதுடன் இம்முயற்சி நிச்சியம் வெற்றியளிக்கும் என்று குறித்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment